Wednesday, 12 March 2014

விழுவதும் இங்கு எழுவதற்கோ!



விழுந்த விதை
   மண்ணில் முட்டி
மரமாகியது...!

விழுந்த மழை
   பூமியின் தாகம்
தணித்தது...!

விழுகின்ற கண்ணீர்
   வலியின் வேதனையை
விட்டொழிக்கிறது...!

விழுகின்ற குழந்தை
   எழுகையில் - அன்னையுடைய
நம்பிக்கையின் நரம்புகளுக்கு
   உயிரூட்டுகிறது...!

விழுவதும் இங்கு
       எழுவதற்க்கோ!
வாழ்வின் விட்டுபோன
       பக்கங்களை
வீசிய காற்றிலாவது
       புறட்டிவிட்டு – அக்
காற்று கூட
   அதிர்ந்துபோக - நம்
வாழ்வுக்கு
       வளுவூட்டிக் கொள்ள...!

No comments: