விழுந்த
விதை
மண்ணில்
முட்டி
மரமாகியது...!
விழுந்த
மழை
பூமியின்
தாகம்
தணித்தது...!
விழுகின்ற
கண்ணீர்
வலியின்
வேதனையை
விட்டொழிக்கிறது...!
விழுகின்ற
குழந்தை
எழுகையில்
- அன்னையுடைய
நம்பிக்கையின்
நரம்புகளுக்கு
உயிரூட்டுகிறது...!
விழுவதும் இங்கு
எழுவதற்க்கோ!
வாழ்வின்
விட்டுபோன
பக்கங்களை
வீசிய காற்றிலாவது
புறட்டிவிட்டு – அக்
காற்று கூட
அதிர்ந்துபோக - நம்
வாழ்வுக்கு
வளுவூட்டிக் கொள்ள...!
No comments:
Post a Comment