ஒளித்துகள்கள்
அங்கு திரையிட
சந்திரத் தென்றல் என
பொறிக்கப்பட்ட
மைல் கல் - அருகிலே
தலை நிமிர்ந்து
கொக்கரித்த சேவல்...!
தெருவெங்கும்
அராவாரம்
திண்ணைதோறும்
முதியவர் கூட்டம்
திசையரியா
மழலையின்
முகம் நனைத்த
கண்ணீர் துளி...!
முகம் பார்ப்பதற்குள்
முழுதாய் நேசித்தவள்
ஓடிவந்து
விட்டுச் சென்ற
நடை வண்டி...!
பகலவனை கண்ட
பனித்துளியாய்
தொலைந்து போன
கண்ணீர் துளியும்
நடை பழகிய
கால்களில்
வலுத்துவிட்ட உற்ச்சாகமும்...!
No comments:
Post a Comment