Saturday, 28 January 2017

எழுந்து வா

எழுந்து வா தமிழா
        எழுந்து வா...!

உனக்காக
        அழுகின்ற கண்கள்
உந்தன் வீரம்
        பேசும் தூரம்
வெகு தொலைவில்
         இல்லை...!

ஏந்திய தழும்புகள்
       காலம் தாண்டியும்
உன்னில் உறைகின்ற
      போராட்டக் குணத்தின்
காலச் சுவடுகள்...!

பகையினை
       மறந்துவிடு - அது
சுயநலத்தின்
      உச்சம் - நீயோ
நற்சமுதாயத்தின்
      விருச்சம்...!

எழுந்து வா தமிழா
        எழுந்து வா...!

No comments: