அன்னமிட்ட தாயின்
கருவறை அறுக்கும்
அரங்கேற்றம் - இன்று
கதிராமங்கலத்தில்...!
கண்ணிருந்தும்
குருடனாய் - நாம்
வரவேற்கும் மற்றுமொறு
சோமாலியா
என்றோ
விலைப்போன
நம் ஒற்றை
துருப்புச்சீட்டால்…!
மண்தான்
நமது பலம்
அச்சடித்த
காகிதமல்ல
காலத்தே
பொழிகின்ற மழைதான்
நமது வளர்ச்சி
மாற்றமே உருக்கொண்ட
அட்டவணையில்
மேலெழுவதல்ல…!
No comments:
Post a Comment