Sunday, 29 June 2014

வண்ணத்துப் பூச்சி

வாழ்வின் வதைபாடுகளை
      உலகை காணுமுன்னே
கண்டெடுத்தாலும் - அதன்
      சிறகுகளில்தான் எத்தனை
ஆராவாரம்...!

உந்தன் பலம்
     திரட்டும் பக்குவத்தில்
பக்தனானோம் - உலகினில்
    வாழத் தேவையானதென
மன்றங்கள் முழங்கிய
   அந் நாளிலே...!
  
உன் மேனியெங்கும்
     சிதறிக்கிடக்கும் வண்ணங்கள் - இன்றும்
எங்கள் வாண்டுகளின்
     விளங்கமுடியா அதிசயம்...!

வாழ்வின் பாதியை
      கூண்டுக்குள் கழித்தாலும்
வாழுகின்ற காலமட்டும்
      சந்தோசத்தில் சுற்றித்
திரியச் சொன்ன
     வரம் உனக்கு...!

Thursday, 26 June 2014

தோய்வதுவுமில்லை

அன்பினில்
       தொலைந்து போகும்
அறிவு - பகையினில்
       தோய்வதுவுமில்லை...!

கஷ்டத்தில்
      சோர்ந்து போகும்
ஆசை - வெற்றியில்
      சோரம் போவதில்லை...!

ஏழை இங்கு
      அழிக்க வேண்டிய
இதயத்தின் ஆசையும்
      செல்வந்தன்
தொலைக்க வேண்டிய
      செல்வம்  தரும்
பலமும் -  தோய்ந்து
       போகும் வரை
தொடும்
        துரத்தில் இல்லை  - நாம்
தொலைத்து விட்ட
        நிம்மதி...!

Monday, 16 June 2014

இடி முழக்கம்

மலை முகடுகள்
     சுமந்து நின்ற
நிலவொளியின்
     மூன்றாம் பிறை...!
 
முல்லை நில
      நீர் வளத்தில்
முகம் புதைத்திருந்த
      வெண் தாமரை...!

ஆணை முகனின்
      அர்ச்சனைக்காக
அந்தரத்தில் வளர்க்கப்பட்ட
     அருகம் புல்...!

தூரத்தில் நின்று
      விட்டெரிந்த கற்களில்
தோன்றி மறையும்
      அலைகளில்
உருகிக் கொண்டிருந்த
     சிறுவன்...!

எட்டுத்திக்கும் நடுநடுங்க
      நெற்றி நடுவில்
அடித்‌தர் போல
      அச்சுருத்திய
இடி முழக்கம்...!