விழுகின்ற
வருடங்களின்
வர்ணனையை மாற்றிக்கொள்ள
விலைமதிப்பற்றதென
நெஞ்சினில்
எழுதிக்
கொள்வோம்
அழிந்துபோகா
மையினை
விரல் நுனி
சுமக்கும் முன்னே...!
ஆராவாரம்
அடங்கிவிடும்
அச்சடித்த காகிதங்களும்
தீர்ந்துவிடும்
- தீராதது
நம் கனவுகளே - அதனை
கரைசேர்க்கும்
கரங்களுக்கு கைகொடுப்போம்
கட்டிய
கோட்டையில்
ஏழைக்கான குரலும் ஒலித்திருக்க...!
மந்திரக்
கோல் - உன்னிடமே
மனி மகுடம்
சூடிக் கொள்வது
மனிதத்தை
மதிக்கின்ற
மானுடமாகட்டும்
அச்சடித்த காகிதங்களை
ஆராதிக்கின்ற
அர்ச்சகர்களை விட...!