Saturday, 19 April 2014

வாக்குகள்



விழுகின்ற வருடங்களின்
    வர்ணனையை மாற்றிக்கொள்ள
விலைமதிப்பற்றதென நெஞ்சினில்
          எழுதிக் கொள்வோம்
அழிந்துபோகா மையினை
    விரல் நுனி சுமக்கும் முன்னே...!

ஆராவாரம் அடங்கிவிடும்
    அச்சடித்த காகிதங்களும்
தீர்ந்துவிடும்  -    தீராதது
            நம் கனவுகளே - அதனை
கரைசேர்க்கும்
     கரங்களுக்கு கைகொடுப்போம்
கட்டிய கோட்டையில்
            ஏழைக்கான குரலும் ஒலித்திருக்க...!

மந்திரக் கோல் -   உன்னிடமே
    மனி மகுடம்
சூடிக் கொள்வது
    மனிதத்தை மதிக்கின்ற
மானுடமாகட்டும்
    அச்சடித்த காகிதங்களை
ஆராதிக்கின்ற  
    அர்ச்சகர்களை விட...!

Wednesday, 16 April 2014

பலம்

வலியில்லாமல் வளர்ந்திருந்தால்
      வாடை காற்றில் கூட
நம் புன்னகை
      புதைந்துவிடும்...!

தோல்வி நம்மை
      தொட்டதில்லை என்றால்
தடுமாறிய கால்கள் கூட
       நம்மை தடம் புறட்டிவிடும்...!

ஏற்ற இரக்கங்கள்
      பாதை வழி
வந்ததில்லை எனில்
      காற்றில் மிதந்துவரும்
நெற்பதர் கூட
      நம்மை பாதாளத்தில்
தள்ளிவிடும்...!

தோல்வியும் இங்கு
      தேவைதான் - இல்லை
என்றவுடன் தெரியவரும்
      உண்மை முகம் - உன்னை
முடக்கிவிடாமல் இருக்க...!

Saturday, 5 April 2014

கடற்கரை

விளையாடிய
       குழந்தை தலை
சாய்த்து சிரித்தது
       நம்பிக்கையை தொலைத்து
நிம்மதி தேடிய
       ஜிவங்களின் அவநம்பிக்கை
தொலைந்து போக...!

கரை தாண்டிய
       ஆமை - தன்
புலன்களை அடக்கி
        தன்னை காத்திருந்தது - அங்கு
கரை ஒதுங்கிய
        கட்டு மரங்கள்
உழைத்துவிட்ட களைப்பில்
        உரங்கத் தொடங்கியது...!

வீசிய காற்றில்
       வளர்ந்துவிட்ட அலைகள்
கூட்டத்தின் கால்
        நனைத்து சென்றது - அங்கும்
வீனையில் தோன்றிய
        இசை வெள்ளம்
வீதி வழி ஓடியது...!

பவனிவந்த பகலவன்
        பணிவுடன் விடை
கேட்டு மறைந்தது
        பனிவிழும் இரவில்
வானும் கடல் நீலமும்
        கலக்கிற மையப் புள்ளியில்...!