உறவுகள் இருக்கையில்
இழக்க மறுத்து
இழந்தபின்
நினைவுகளில் நெருடுகின்ற
நெறுஞ்சி முற்களாய் - இந்த
இருமாப்பு...!
Saturday, 27 October 2012
Saturday, 20 October 2012
காட்சி
தூரலை துணையாக்கி
துயிலெழுந்த காலை - அங்கே
குளிரினில் கோபுரத்தில்
உடல் குறுக்கி நின்ற புறாக்கள்...!
மின்சாரமில்லா அரங்கத்தை
மிரட்டுகின்ற அமைதி - மீள்வினையாய்
மழைத் துளியின் சந்தத்தில்
கலந்துவிட்ட ஆலய மணியோசை...!
இயந்திரத்தின் அசைவுகளில்
தினம் தினம் அருந்துபோகும்
ஒலி உணர் உறுப்புகளின்
உன்னத ஓய்வு...!
வறச்சியினை நீக்க வந்த
நீல வானம் நிந்திக்காமல்
நிலமகளை நனைத்தாலும்
வீதியில் வளம்வரும்
மனிதத்தின் எண்ணிக்கையில்
ஏற்ப்பட்டு போன வறச்சி...!
மொத்தத்தில் - நம்
மனம் மயங்கும்
மௌனம் மட்டும்
வீதியெங்கும்...!
துயிலெழுந்த காலை - அங்கே
குளிரினில் கோபுரத்தில்
உடல் குறுக்கி நின்ற புறாக்கள்...!
மின்சாரமில்லா அரங்கத்தை
மிரட்டுகின்ற அமைதி - மீள்வினையாய்
மழைத் துளியின் சந்தத்தில்
கலந்துவிட்ட ஆலய மணியோசை...!
இயந்திரத்தின் அசைவுகளில்
தினம் தினம் அருந்துபோகும்
ஒலி உணர் உறுப்புகளின்
உன்னத ஓய்வு...!
வறச்சியினை நீக்க வந்த
நீல வானம் நிந்திக்காமல்
நிலமகளை நனைத்தாலும்
வீதியில் வளம்வரும்
மனிதத்தின் எண்ணிக்கையில்
ஏற்ப்பட்டு போன வறச்சி...!
மொத்தத்தில் - நம்
மனம் மயங்கும்
மௌனம் மட்டும்
வீதியெங்கும்...!
Sunday, 14 October 2012
முன் இரவு
கதிரவனின் கடை பார்வையினை
காரிருள் மெல்ல
வெற்றி கொள்ளும் நேரம்...!
தன் உணர்விழந்து
ஆட்டமிடுகின்ற
அணிப்பிள்ளையின்
ஆனந்த கூச்சல்...!
தென்றலின் தழுவலில்
தன்னை சமர்ப்பனம் செய்யும்
சருகுகளின் சலசலப்பு...!
அரை நிலா அறை முற்றத்தில்
வளம் வந்து கொண்டிருக்க
வெண்மை மேகம் மெல்ல
அதன் நாணத்தை
மறைப்பதற்க்கான முயற்ச்சி...!
முழு இருளும் அங்கில்லை
வெளி முழுவதுமான
வெளுப்பும் அங்கில்லை
வெற்றியும் தோல்வியும்
பரிமாரிக்கொள்ளும் அனுபவத்தில்
அழிந்துபோகும் ஆனவமாய் - இந்த
பகளிருல் பாலம்...!
காரிருள் மெல்ல
வெற்றி கொள்ளும் நேரம்...!
தன் உணர்விழந்து
ஆட்டமிடுகின்ற
அணிப்பிள்ளையின்
ஆனந்த கூச்சல்...!
தென்றலின் தழுவலில்
தன்னை சமர்ப்பனம் செய்யும்
சருகுகளின் சலசலப்பு...!
அரை நிலா அறை முற்றத்தில்
வளம் வந்து கொண்டிருக்க
வெண்மை மேகம் மெல்ல
அதன் நாணத்தை
மறைப்பதற்க்கான முயற்ச்சி...!
முழு இருளும் அங்கில்லை
வெளி முழுவதுமான
வெளுப்பும் அங்கில்லை
வெற்றியும் தோல்வியும்
பரிமாரிக்கொள்ளும் அனுபவத்தில்
அழிந்துபோகும் ஆனவமாய் - இந்த
பகளிருல் பாலம்...!
Saturday, 6 October 2012
கலப்பு
கண்ணீரும் கலகலப்பும்
வலியும் வெற்றியும்...!
இரக்கமும் இருமாப்பும்
பாசமும் வேசமும்...!
அன்பும் ஆத்திரமும்
காதலும் காமமும்...!
சந்தோசமும்
சருக்கிய பாதையின் வடுக்கலும்...!
மனித வாழ்வை நிறப்ப வந்த
இரட்டை குழந்தைகளாய்...!
கண்ணீர் மட்டும்
காலம் சொல்லும் கதையானால்
கரித்துப் போகும்
வாழ்வு முழுவதும்
சந்தோசமானால் சலித்துப் போகும்...!
என்ற மகத்துவத்தாலோ
இவ்வுணர்வுகளின்
கலப்பாய் கிடக்கிறது - இந்த
மனித வாழ்வு...!
வலியும் வெற்றியும்...!
இரக்கமும் இருமாப்பும்
பாசமும் வேசமும்...!
அன்பும் ஆத்திரமும்
காதலும் காமமும்...!
சந்தோசமும்
சருக்கிய பாதையின் வடுக்கலும்...!
மனித வாழ்வை நிறப்ப வந்த
இரட்டை குழந்தைகளாய்...!
கண்ணீர் மட்டும்
காலம் சொல்லும் கதையானால்
கரித்துப் போகும்
வாழ்வு முழுவதும்
சந்தோசமானால் சலித்துப் போகும்...!
என்ற மகத்துவத்தாலோ
இவ்வுணர்வுகளின்
கலப்பாய் கிடக்கிறது - இந்த
மனித வாழ்வு...!
Subscribe to:
Comments (Atom)