மழலை தொடங்கி
மடியும் வரை
மனிதம் மறக்காமல்
சேர்த்து வைக்கும்
ஒற்றை எதிர்மறை...!
நிழல்களில்
தெரிவதில்லை ஆனாலும்
நிஜத்தினில்
நெருடுகின்ற
நினைவுகளின்
முதற் புள்ளி...!
இது
தொலைந்து போகையில்
தொடர்வதும்
தொடர்கையில்
தொலைவதுமாய் - நம்
மன நிம்மதி...!
Thursday, 16 April 2015
Wednesday, 18 March 2015
இழப்பு
நட்சத்திர ஒளித்
துகள்கள் தூவிய
மழையினிலே
நனைகின்ற பூமி...!
அலைகடல் அள்ளிக்
கொண்டுவந்து
வீசிய சாரலில்
உருண்டு வந்த
வெண் சங்கு...!
அச்சப்பட்டு
அனைத்தையும்
ஓட்டுக்குள்
அடக்கிக் கொண்ட
ஆமை...!
ஆழத்தின் அளவில்
அமைதி கொண்ட
கடலின்
மையப் புள்ளி...!
சந்திரனும் தென்றலும்
கை கோர்த்து
அள்ளிக் கொண்டுபோன
மனித மனங்கள் ...!
துகள்கள் தூவிய
மழையினிலே
நனைகின்ற பூமி...!
அலைகடல் அள்ளிக்
கொண்டுவந்து
வீசிய சாரலில்
உருண்டு வந்த
வெண் சங்கு...!
அச்சப்பட்டு
அனைத்தையும்
ஓட்டுக்குள்
அடக்கிக் கொண்ட
ஆமை...!
ஆழத்தின் அளவில்
அமைதி கொண்ட
கடலின்
மையப் புள்ளி...!
சந்திரனும் தென்றலும்
கை கோர்த்து
அள்ளிக் கொண்டுபோன
மனித மனங்கள் ...!
Thursday, 19 February 2015
இனிமை
மரங்களின் வெறுமை
வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
உருவாக்கிய சங்கீதம்...!
மின்னலின் கீற்று
தொட்டுச்சென்ற
மலை முகடு
வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
மழலையின் குரலினிமை...!
வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
உருவாக்கிய சங்கீதம்...!
மின்னலின் கீற்று
தொட்டுச்சென்ற
மலை முகடு
வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
மழலையின் குரலினிமை...!
Thursday, 12 February 2015
கொடியும் சிறுவனும்
முகம் மறைக்கும்
உறை பனி
காற்றில் மிதந்து வந்த
மித மழைச் சாரல்
அங்கே
நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!
மண்ணின் மரபுகளை
நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
முன் நிற்க
அன்னையின் அன்பினில்
அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!
கண்டிருந்த சிறுவனின்
கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
அழுக்கான
மனங்கள் தரும்
நெருக்கடியில்
நடக்காத தோரணை...!
உறை பனி
காற்றில் மிதந்து வந்த
மித மழைச் சாரல்
அங்கே
நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!
மண்ணின் மரபுகளை
நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
முன் நிற்க
அன்னையின் அன்பினில்
அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!
கண்டிருந்த சிறுவனின்
கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
அழுக்கான
மனங்கள் தரும்
நெருக்கடியில்
நடக்காத தோரணை...!
Friday, 23 January 2015
இருள் ஒளி
மின்னலின் கீற்றினில்
முகம் பார்க்கும்
மை இருட்டு - அங்கே
மரம் சூடிக் கொண்ட
வீண் மீன்களாய்
மின்மினிக் கூட்டம்...!
அச்சுருத்தும் ஆந்தையின்
அலறல்கள்
இயற்கையின் படைப்பினில்
அரக்க உருவம்
கொண்டுவரும்
மாயத் தோற்றம்...!
ஆளுயர அய்யனாரது
வாள் முனை- அங்கு
எற்றி வைத்த
தீப ஒளியில் - எங்கள்
மன இருள்
விலகுவதாய்
விழுந்திருந்த
நம்பிக்கையின்
விழுதுகள்...!
முகம் பார்க்கும்
மை இருட்டு - அங்கே
மரம் சூடிக் கொண்ட
வீண் மீன்களாய்
மின்மினிக் கூட்டம்...!
அச்சுருத்தும் ஆந்தையின்
அலறல்கள்
இயற்கையின் படைப்பினில்
அரக்க உருவம்
கொண்டுவரும்
மாயத் தோற்றம்...!
ஆளுயர அய்யனாரது
வாள் முனை- அங்கு
எற்றி வைத்த
தீப ஒளியில் - எங்கள்
மன இருள்
விலகுவதாய்
விழுந்திருந்த
நம்பிக்கையின்
விழுதுகள்...!
Subscribe to:
Posts (Atom)