Thursday, 7 May 2020

அருவி

தூங்கும் அருவியும்
         துயில் கலைக்கும்
காலைக் கதிரவனும்
        தோகை விரித்து நின்ற
மயிலும்
         தோன்றி மறைந்த
வானவில்லும்...!

விட்டு விட்டு
      பொழிகின்ற
வானிலையும் அங்கே
      மென்மையாய்
ஷ்பரிசம் தொட்டு
      செல்லும் - ஈரக்
காற்றும்...!

மலை மீது மோதி
     திரும்புகின்ற
மேகங்களும்
     திசைமாறாமல்
பயணிக்கின்ற
     நதி நீரும்...!

துள்ளிக் குதித்தோடும்
      மீன் குஞ்சுகளும்
மவுனமாய்
      தூரத்தில் இரை தேடி
காத்திருக்கும்
      முதலையும்...!

நீண்டு நெடுந்துயர்ந்த
       மரங்களும்
தன் கூட்டருகே
      பறந்து வந்த
பருந்து கண்டு
     ஆர்பரிக்கும்
பறவைக்  கூட்டமும்...!

தாயின் முகம்
     பார்த்து
புன்னகைக்கும்
      குழந்தையும்
மனம் மயங்கும்
      வண்ணத்தில்
புதிதாய்
       பிறந்திருந்த
பூக்களும் சேர்ந்து
      வனப்பூட்டின
அவ் வான்மகளின்
     குழந்தைக்கு...!

Friday, 21 December 2018

முல்லிவாய்க்கால்

திரும்பிய
      திசையெங்கும்
தீண்டிய
      தோட்டாக்கள் - உன்னை
துளைத்தெடுத்தும்
      திரும்பி ஓடா
போர் குணம்...!

துரோகத்தில்
       திகைத்து
மரணத்தை
       தழுவினாலும்
மண்ணை
      விட்டுத்தராத - உந்தன்
மனித மாண்பு...!

பிரிந்த உன்
     மூச்சுக்காற்று
சலசலத்தது -  தாய்
      மண்ணின் மீது - நீ
கொண்ட காதலின்
      கதை சொல்லி...!

தேடல் இருக்கும் வரை
      வாழ்வு முடிவதில்லை
விடியல் இருக்கும் வரை
      வீரம் வீழ்வதில்லை
வரலாறு இருக்கு மட்டும்
       உங்கள் கால்தடம்
மறைவதுவுமில்லை...!

Friday, 11 May 2018

இருள் உலகம்

அரை நிலவும்
        அன்றதனை
சூழ்ந்து நின்ற
         நட்சத்திர ஒளியும்
சலவைக்கல் பதித்த
        மதில் சுவராய்
இரவென்னும்
         கோட்டையில்...!

இடைவிடாது
        பொழிகின்ற
பனித்துளியும் - அப்
        பகலவன்
விட்டு சென்ற
       கதகதப்பை
இறகுக்குள்
       இருக்கிக்கொண்ட
பறவைக்
       கூட்டமும்...!

மெல்ல மெல்ல
       ஸ்பரிசம்
தொட்டு சென்ற
       தென்றலும் - அங்கே
மென்மையை
        மெருகேற்றும்
தென்னையின்
       கீற்றுக்கிடையேயான
ஒளி முறிவும்
       அழகாகிற்று - இவ்
இருள் உலகை...!

Saturday, 17 February 2018

திரிபு

அணிந்து வந்த
        நாகரீக வேடமும்
மறந்துவிட்ட
       மனித மாண்புகளும்
மிருகம் ஆக்கிற்று
      அன்று அவரை...!

தன் தோழியுடன்
      விளையாட்டில்
தொலைந்து போய்
      தன்னை அறியாது
அவர் மேல்
      விழுந்ததில்
தூக்கி ஏறியப்பட்டு
       துடி துடித்த
நாய் குட்டி...!

வர்ணனைகள்
     கலைந்த முகம்
கண்களில்
     வழிந்தோடிய கண்ணீர்
துடிக்கின்ற
      தன் தோழனை
வாரி அனைத்துக்கொண்ட
     சிறுமி...!

அன்று வாடிய கொடிக்கு
       தேர் கொடுத்தோம்
இன்று சலவை செய்த
      ஆடைக்குள்
அழுகிய மனங்கள்
      வளர்க்கிறோம்
நாகரீகம்
     என்று சொல்லி...!

Saturday, 25 November 2017

மண்ணுலகம் (ம) பூமி

பகலவனை
       பிரிந்தாலும்
இட வலமாய்
       சுழன்றாலும்
இருள் பகலாய்
       தொடர்ந்தாலும்
 ஊன் உயிர் வாழும்
       கருவறை நீ...!

நிலமும்
      நீலக்கடலும்
இம்மலையும்
      காடுகளும் - அவ்
வறண்டு விட்ட
      வனங்களும்
நீ உடுத்திய
      வண்ண உடைகள்...!

ஆழ்கடலென
       தாழ்வதும்
இமையமாய்
     வளர்வதும்
அக்னியாய்
      எரிப்பதும்
சூறாவளியாய்
       சுழல்வதும்
கார்மேகமாகி
       பொழிவதும்
உந்தன் சமநிலையின்
       வெளிப்பாடு...!

விழுந்தாலும்
       இங்கேயே
விதைக்கப்பட்டவர்களாய்
       வாழ்கிறோம்
உந்தன்
      கண்ணிமைக்குள்...!