Thursday, 12 February 2015

கொடியும் சிறுவனும்

முகம் மறைக்கும்
    உறை பனி
காற்றில் மிதந்து வந்த
       மித மழைச் சாரல்
அங்கே
       நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
        நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!


மண்ணின் மரபுகளை
        நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
       முன் நிற்க
அன்னையின் அன்பினில்
      அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
      அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!

கண்டிருந்த சிறுவனின்
       கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
      கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
      அழுக்கான
மனங்கள் தரும்
     நெருக்கடியில்
நடக்காத தோரணை...!

Friday, 23 January 2015

இருள் ஒளி

மின்னலின் கீற்றினில்
      முகம் பார்க்கும்
மை இருட்டு - அங்கே
      மரம் சூடிக் கொண்ட
வீண் மீன்களாய்
      மின்மினிக் கூட்டம்...!

அச்சுருத்தும் ஆந்தையின்
       அலறல்கள்
இயற்கையின் படைப்பினில்
       அரக்க உருவம்
கொண்டுவரும்
       மாயத் தோற்றம்...!

ஆளுயர அய்யனாரது
       வாள் முனை- அங்கு
எற்றி வைத்த
       தீப ஒளியில் - எங்கள்
மன இருள்
       விலகுவதாய்
விழுந்திருந்த
        நம்பிக்கையின்
விழுதுகள்...!

Wednesday, 31 December 2014

வளர்ச்சி

சாலையோரப் பூக்கள்
     சங்கீதம் பாடிவந்த
மென் மழை சாரல்
     மரக் கூடுகளில்
உணவூட்டிய
     தாய்ப் பறவை
சர சரவென
      சாலையை
கடந்து சென்ற
     சாரைப் பாம்பு
பதற்றதில்
    தடம் புரண்ட
இரு-சக்கர
    வாகனம்...!
 
வீசிய காற்றின்
      ஆற்றல் அங்கே
உயிர் கொடுக்க - அவன்
      அரைகண் மட்டும்
விழித்திருக்க
      வழி வந்தோர்
வாரி அனைத்து
     வீதி வரை ஓடிவர
ஓலக் குடிசையெங்கும்
     ஓலக் குரல்
நிறைந்துவிட
   நிலை உணர்ந்தவன்
உதடுகள் உச்சரித்த
   ஒற்றை வார்த்தையும்...!

பசியெடுத்து
     உண்ணுகின்ற  உணவு
உழைத்துவிட்ட
     களைப்பினில்
உருவான நல்லுறக்கம்
     உலவுகின்ற
உயிரனங்களை
     உருத்தாத
மன நிம்மதி - இவைகளின்
     சொந்தக்காரன்
வாழுகின்ற குடிலில்
     வளந்திருந்த சந்தோசம்...!

Friday, 19 December 2014

பரிமாற்றம்

 திகைக்கின்ற
      திசையறியா  பாதையிலும்
உறைகின்ற
      பனியிலும்
துப்பாக்கி முன்னே
      உயிர் துறந்தும்
உயிர் சுமப்பவளை
     காத்து நிற்கும்
காவலர்கள்
     ஒரு புறம்...!

கல்லறையின்
      கனவு கண்டாலும்
தாய் மடி தேடும்
      பிஞ்சுகளை
புதைக்குழுயிலிடும்
      பாதையில்லா
பைத்தியக்காரர்கள்
      மறு புறம்...!

தன் மக்களின்
     உணர்வுகளின் வலியை
உரக்க கூறி நின்ற
     தலைமகனின்
உருக்கக் குரல்
    ஒறு புறம்...!

மகவுகளை இழந்தாலும்
     நிகழ்வுகளின் உண்மையை
உணர்வதற்குள்
    அடி மனத்தில்
பகையினில்
     தீவைக்கின்ற
திட்டக் குழு
    மறு புறம்...!

ஆயுதம் ஏந்திய
    அரக்கர்களே
தேடுங்கள் புதுத்
     தீவுத்திடலை
உங்களில் பெரியவரை
     கண்டெடுக்கும்
போர்க்கலமாய்....!

தீய்மைக்கு தண்டனை
     தீமையென்றால்
 நீங்கள் திரும்பும்
    திசையெங்கும்
தணல் காடாகும்
    வரம் பெற்றவர்கள்...!

வாழ விடுங்கள்
    வாழப் பிறந்தவர்களை...!

Saturday, 15 November 2014

புதுத் தளிர்

வானவில்
      விட்டு சென்ற
வண்ணங்களின்
      சிதறல்களில்
உருகொண்டிருந்த
     தாய் முகம்...!
 
நெடுந்தூரப்
     பாதையில்
இரும்புப் பறவை
      விட்டு சென்ற
வழித்தடம்...!

வானத்தின்
      எல்லை வரை
பறந்துவிட
      வட்டமிட்டு
பறந்திருந்த
     வெண் பருந்து...!

வீசிய காற்றில்
        திசையறியாது
திகைக்கின்ற
       சிறுவனின்
காகிதப்
        பறைவை...!

வலிமை
      குறைந்தாலும்
உயிர் வாழ
      ஒளியூட்டிக்
கொண்டிருந்த
     பகலவன்...!

கருமேகங்கள்
      கலைந்தாலும்
இரக்கத்தில்
      பொழிந்துவிட்ட
மழைத்துளியில்
      புத்துணர்வு
கொண்டிருந்த
      புதுத் தளிர்...!