Friday, 17 October 2014

கற்பனை

நிழலுக்கும்
     நிஜத்திற்குமிடையில்
வளருகின்ற
     விருச்சம்
இயல்புக்கும்
     இச்சைக்குமிடையில்
தோன்றி மறையும்
      கனவு...!

வரையறை தாண்டிய
      வெள்ளப் பெருக்கு
ஆட்கொள்ளும்
      இருளைப் போல் - இதன்
வளர்ச்சிக்கு
      குறைவிருப்பதில்லை
விடிகின்ற வெளிச்சமும்
      உணர்ந்துவிட்‌ட 
உண்மை - நம்மை
     விடுவிக்கும் வரை...!

கண்விழிக்கும்
      சிறு குழுந்தையின்
அறியாமையானாளும்
      அடைகின்ற
ஆனந்தத்தை போல் - இக்
       கற்பனையின்
சிறகுகளுக்கு
       வலிப்பதில்லை - அவ்
வான்முழுவதும்
       விரிந்தபின்னும்...!

Sunday, 12 October 2014

சிவாலயம்

மாவிலையில்
     கட்டிவைத்த தோரணமும்
மாவிளக்கில்
     ஏற்றிவவைத்த தீபமும் - அதில்
தீய்ந்துபோன
     திரிகளின் வாடை
காற்றில்
     மிதந்திருக்க...!

மஞ்சள்  முக
       நாயகியும் நாயகனும்
பொன்னிற ஆடையில்
       பூமேடையில்
மனம் புரிய 
       அமர்ந்திருப்பதாய்
கட்டிவைத்த காட்சி...!

ஆலய மணியோசையும்
      ஆராத்தியும்
ஒன்று சேர்ந்து
      குலம் வாழச் சொல்லி
வணங்கி நிற்கும்
      மனித இனம்...!

எரிந்த நெய்
      விளக்குகள்
விட்டுச் சென்ற
      சூழ்நிலையும்
திகைக்காத
       நினைவலைக்குள்
சிக்கித் தவிக்கும்
       மனங்களும் - திகைப்பில்
திவ்ய நிலைக்கு
      சென்று வர - அன்றே
செதுக்கி வைத்த
      செல்வமாய் - அச்
சிவாலயம்...!