Saturday, 19 May 2012

அன்னையர் தினம்

உந்தன் உதிரத்தில்
       உருமாறியா உடல்...!

உந்தன் மூச்சிக்காற்றில்
       சுவாசித்த எங்கள்
முதல் சுவாசம்...!

 உந்தன் முகம் பார்க்க
        முதலில் அசைந்த
எங்கள் கண் இமை...!

பசிப்பதற்கு முன்
         பதறுகின்ற மனம்
அழுதவதற்குள் அள்ளி
        அனைத்துக்கொள்ளும்
அன்பு உருவம்...!

நிஜ மனிதனாய்
       நில உலகில்
நடமாட துடித்த
        நாடித்துடிப்பினை
நினைக்கின்ற
      நிஜதினமாய்...!

Saturday, 5 May 2012

கோடை

எழுகின்ற சூரியனின்
          இருமாப்பில் வீசுகின்ற தென்றலில்
ஏற்ப்பட்டுப்போன வறுமை...!


எற்றுக்கொண்ட தாகத்தை
        இறக்கிவைக்க
இழந்துவிட்ட பசுமை...!


வறண்டு போன
        பூமியில் வாசனை
தேடுகின்ற வண்ணத்துப் பூச்சி...!


கண்ணிமைக்கும் நேரத்தில்
       கொட்டிவிட்டு செல்கின்ற
மழைத்துளியும்
       மண்ணை தொட்டவுடன்
தொடங்கி வைக்கின்ற
        மண்வாசனையும்...!