மரங்களின் வெறுமை
வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
உருவாக்கிய சங்கீதம்...!
மின்னலின் கீற்று
தொட்டுச்சென்ற
மலை முகடு
வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
மழலையின் குரலினிமை...!
Thursday, 19 February 2015
Thursday, 12 February 2015
கொடியும் சிறுவனும்
முகம் மறைக்கும்
உறை பனி
காற்றில் மிதந்து வந்த
மித மழைச் சாரல்
அங்கே
நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!
மண்ணின் மரபுகளை
நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
முன் நிற்க
அன்னையின் அன்பினில்
அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!
கண்டிருந்த சிறுவனின்
கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
அழுக்கான
மனங்கள் தரும்
நெருக்கடியில்
நடக்காத தோரணை...!
உறை பனி
காற்றில் மிதந்து வந்த
மித மழைச் சாரல்
அங்கே
நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!
மண்ணின் மரபுகளை
நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
முன் நிற்க
அன்னையின் அன்பினில்
அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!
கண்டிருந்த சிறுவனின்
கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
அழுக்கான
மனங்கள் தரும்
நெருக்கடியில்
நடக்காத தோரணை...!
Subscribe to:
Comments (Atom)