Wednesday, 31 December 2014

வளர்ச்சி

சாலையோரப் பூக்கள்
     சங்கீதம் பாடிவந்த
மென் மழை சாரல்
     மரக் கூடுகளில்
உணவூட்டிய
     தாய்ப் பறவை
சர சரவென
      சாலையை
கடந்து சென்ற
     சாரைப் பாம்பு
பதற்றதில்
    தடம் புரண்ட
இரு-சக்கர
    வாகனம்...!
 
வீசிய காற்றின்
      ஆற்றல் அங்கே
உயிர் கொடுக்க - அவன்
      அரைகண் மட்டும்
விழித்திருக்க
      வழி வந்தோர்
வாரி அனைத்து
     வீதி வரை ஓடிவர
ஓலக் குடிசையெங்கும்
     ஓலக் குரல்
நிறைந்துவிட
   நிலை உணர்ந்தவன்
உதடுகள் உச்சரித்த
   ஒற்றை வார்த்தையும்...!

பசியெடுத்து
     உண்ணுகின்ற  உணவு
உழைத்துவிட்ட
     களைப்பினில்
உருவான நல்லுறக்கம்
     உலவுகின்ற
உயிரனங்களை
     உருத்தாத
மன நிம்மதி - இவைகளின்
     சொந்தக்காரன்
வாழுகின்ற குடிலில்
     வளந்திருந்த சந்தோசம்...!

Friday, 19 December 2014

பரிமாற்றம்

 திகைக்கின்ற
      திசையறியா  பாதையிலும்
உறைகின்ற
      பனியிலும்
துப்பாக்கி முன்னே
      உயிர் துறந்தும்
உயிர் சுமப்பவளை
     காத்து நிற்கும்
காவலர்கள்
     ஒரு புறம்...!

கல்லறையின்
      கனவு கண்டாலும்
தாய் மடி தேடும்
      பிஞ்சுகளை
புதைக்குழுயிலிடும்
      பாதையில்லா
பைத்தியக்காரர்கள்
      மறு புறம்...!

தன் மக்களின்
     உணர்வுகளின் வலியை
உரக்க கூறி நின்ற
     தலைமகனின்
உருக்கக் குரல்
    ஒறு புறம்...!

மகவுகளை இழந்தாலும்
     நிகழ்வுகளின் உண்மையை
உணர்வதற்குள்
    அடி மனத்தில்
பகையினில்
     தீவைக்கின்ற
திட்டக் குழு
    மறு புறம்...!

ஆயுதம் ஏந்திய
    அரக்கர்களே
தேடுங்கள் புதுத்
     தீவுத்திடலை
உங்களில் பெரியவரை
     கண்டெடுக்கும்
போர்க்கலமாய்....!

தீய்மைக்கு தண்டனை
     தீமையென்றால்
 நீங்கள் திரும்பும்
    திசையெங்கும்
தணல் காடாகும்
    வரம் பெற்றவர்கள்...!

வாழ விடுங்கள்
    வாழப் பிறந்தவர்களை...!