திசையெங்கும்
தீண்டிய
தோட்டாக்கள் - உன்னை
துளைத்தெடுத்தும்
திரும்பி ஓடா
போர் குணம்...!
துரோகத்தில்
திகைத்து
மரணத்தை
தழுவினாலும்
மண்ணை
விட்டுத்தராத - உந்தன்
மனித மாண்பு...!
மூச்சுக்காற்று
சலசலத்தது - தாய்
மண்ணின் மீது - நீ
கொண்ட காதலின்
கதை சொல்லி...!
தேடல் இருக்கும் வரை
வாழ்வு முடிவதில்லை
விடியல் இருக்கும் வரை
வீரம் வீழ்வதில்லை
வரலாறு இருக்கு மட்டும்
உங்கள் கால்தடம்
மறைவதுவுமில்லை...!