Friday, 21 December 2018

முல்லிவாய்க்கால்

திரும்பிய
      திசையெங்கும்
தீண்டிய
      தோட்டாக்கள் - உன்னை
துளைத்தெடுத்தும்
      திரும்பி ஓடா
போர் குணம்...!

துரோகத்தில்
       திகைத்து
மரணத்தை
       தழுவினாலும்
மண்ணை
      விட்டுத்தராத - உந்தன்
மனித மாண்பு...!

பிரிந்த உன்
     மூச்சுக்காற்று
சலசலத்தது -  தாய்
      மண்ணின் மீது - நீ
கொண்ட காதலின்
      கதை சொல்லி...!

தேடல் இருக்கும் வரை
      வாழ்வு முடிவதில்லை
விடியல் இருக்கும் வரை
      வீரம் வீழ்வதில்லை
வரலாறு இருக்கு மட்டும்
       உங்கள் கால்தடம்
மறைவதுவுமில்லை...!