அரை நிலவும்
அன்றதனை
சூழ்ந்து நின்ற
நட்சத்திர ஒளியும்
சலவைக்கல் பதித்த
மதில் சுவராய்
இரவென்னும்
கோட்டையில்...!
இடைவிடாது
பொழிகின்ற
பனித்துளியும் - அப்
பகலவன்
விட்டு சென்ற
கதகதப்பை
இறகுக்குள்
இருக்கிக்கொண்ட
பறவைக்
கூட்டமும்...!
மெல்ல மெல்ல
ஸ்பரிசம்
தொட்டு சென்ற
தென்றலும் - அங்கே
மென்மையை
மெருகேற்றும்
தென்னையின்
கீற்றுக்கிடையேயான
ஒளி முறிவும்
அழகாகிற்று - இவ்
இருள் உலகை...!