Friday, 11 May 2018

இருள் உலகம்

அரை நிலவும்
        அன்றதனை
சூழ்ந்து நின்ற
         நட்சத்திர ஒளியும்
சலவைக்கல் பதித்த
        மதில் சுவராய்
இரவென்னும்
         கோட்டையில்...!

இடைவிடாது
        பொழிகின்ற
பனித்துளியும் - அப்
        பகலவன்
விட்டு சென்ற
       கதகதப்பை
இறகுக்குள்
       இருக்கிக்கொண்ட
பறவைக்
       கூட்டமும்...!

மெல்ல மெல்ல
       ஸ்பரிசம்
தொட்டு சென்ற
       தென்றலும் - அங்கே
மென்மையை
        மெருகேற்றும்
தென்னையின்
       கீற்றுக்கிடையேயான
ஒளி முறிவும்
       அழகாகிற்று - இவ்
இருள் உலகை...!