திரும்பிய
திசையெங்கும்
தீண்டிய
தோட்டாக்கள் - உன்னை
துளைத்தெடுத்தும்
திரும்பி ஓடா
போர் குணம்...!
துரோகத்தில்
திகைத்து
மரணத்தை
தழுவினாலும்
மண்ணை
விட்டுத்தராத - உந்தன்
மனித மாண்பு...!
பிரிந்த உன்
மூச்சுக்காற்று
சலசலத்தது - தாய்
மண்ணின் மீது - நீ
கொண்ட காதலின்
கதை சொல்லி...!
தேடல் இருக்கும் வரை
வாழ்வு முடிவதில்லை
விடியல் இருக்கும் வரை
வீரம் வீழ்வதில்லை
வரலாறு இருக்கு மட்டும்
உங்கள் கால்தடம்
மறைவதுவுமில்லை...!
அரை நிலவும்
அன்றதனை
சூழ்ந்து நின்ற
நட்சத்திர ஒளியும்
சலவைக்கல் பதித்த
மதில் சுவராய்
இரவென்னும்
கோட்டையில்...!
இடைவிடாது
பொழிகின்ற
பனித்துளியும் - அப்
பகலவன்
விட்டு சென்ற
கதகதப்பை
இறகுக்குள்
இருக்கிக்கொண்ட
பறவைக்
கூட்டமும்...!
மெல்ல மெல்ல
ஸ்பரிசம்
தொட்டு சென்ற
தென்றலும் - அங்கே
மென்மையை
மெருகேற்றும்
தென்னையின்
கீற்றுக்கிடையேயான
ஒளி முறிவும்
அழகாகிற்று - இவ்
இருள் உலகை...!
அணிந்து வந்த
நாகரீக வேடமும்
மறந்துவிட்ட
மனித மாண்புகளும்
மிருகம் ஆக்கிற்று
அன்று அவரை...!
தன் தோழியுடன்
விளையாட்டில்
தொலைந்து போய்
தன்னை அறியாது
அவர் மேல்
விழுந்ததில்
தூக்கி ஏறியப்பட்டு
துடி துடித்த
நாய் குட்டி...!
வர்ணனைகள்
கலைந்த முகம்
கண்களில்
வழிந்தோடிய கண்ணீர்
துடிக்கின்ற
தன் தோழனை
வாரி அனைத்துக்கொண்ட
சிறுமி...!
அன்று வாடிய கொடிக்கு
தேர் கொடுத்தோம்
இன்று சலவை செய்த
ஆடைக்குள்
அழுகிய மனங்கள்
வளர்க்கிறோம்
நாகரீகம்
என்று சொல்லி...!