Saturday, 25 November 2017

மண்ணுலகம் (ம) பூமி

பகலவனை
       பிரிந்தாலும்
இட வலமாய்
       சுழன்றாலும்
இருள் பகலாய்
       தொடர்ந்தாலும்
 ஊன் உயிர் வாழும்
       கருவறை நீ...!

நிலமும்
      நீலக்கடலும்
இம்மலையும்
      காடுகளும் - அவ்
வறண்டு விட்ட
      வனங்களும்
நீ உடுத்திய
      வண்ண உடைகள்...!

ஆழ்கடலென
       தாழ்வதும்
இமையமாய்
     வளர்வதும்
அக்னியாய்
      எரிப்பதும்
சூறாவளியாய்
       சுழல்வதும்
கார்மேகமாகி
       பொழிவதும்
உந்தன் சமநிலையின்
       வெளிப்பாடு...!

விழுந்தாலும்
       இங்கேயே
விதைக்கப்பட்டவர்களாய்
       வாழ்கிறோம்
உந்தன்
      கண்ணிமைக்குள்...!