பகலவனை
பிரிந்தாலும்
இட வலமாய்
சுழன்றாலும்
இருள் பகலாய்
தொடர்ந்தாலும்
ஊன் உயிர் வாழும்
கருவறை நீ...!
நிலமும்
நீலக்கடலும்
இம்மலையும்
காடுகளும் - அவ்
வறண்டு விட்ட
வனங்களும்
நீ உடுத்திய
வண்ண உடைகள்...!
ஆழ்கடலென
தாழ்வதும்
இமையமாய்
வளர்வதும்
அக்னியாய்
எரிப்பதும்
சூறாவளியாய்
சுழல்வதும்
கார்மேகமாகி
பொழிவதும்
உந்தன் சமநிலையின்
வெளிப்பாடு...!
விழுந்தாலும்
இங்கேயே
விதைக்கப்பட்டவர்களாய்
வாழ்கிறோம்
உந்தன்
கண்ணிமைக்குள்...!