Friday, 25 November 2016

வசந்தம் வரும்

வரம் கிடைக்கு முன்னே
      விரதமெனும் வதைபாடு
இருள் விலகும் முன்னே
      வளம்வரும் சலசலப்பு
நன்மையின் தொடக்கத்தின்
      தீய்மையின் துடிதுடிப்பு...!

வலி உள்ளவர்களின்
       கூச்சல் குரல்
 தினம் தினம் - இங்கு
       ஓங்கி ஒலிக்க...!
   
வதைபடும் கூட்டத்தின்
       கண்களில்
ஏற்றிவத்த கனவுகள்
      கலையாமல்
காக்கின்ற தலைவனின்
      கரங்களின்
வலிமை கூடட்டும்...!

 கருப்பு தாள்கள்
        இங்கு குறையுமோ
இல்லையோ
       எற்றத் தாழ்வுகள்
குறைகின்ற பாதையின்
      முதல் அடி - இன்று
வலியானாலும்
     வசந்தம் வரும்...!