வரம் கிடைக்கு முன்னே
விரதமெனும் வதைபாடு
இருள் விலகும் முன்னே
வளம்வரும் சலசலப்பு
நன்மையின் தொடக்கத்தின்
தீய்மையின் துடிதுடிப்பு...!
வலி உள்ளவர்களின்
கூச்சல் குரல்
தினம் தினம் - இங்கு
ஓங்கி ஒலிக்க...!
வதைபடும் கூட்டத்தின்
கண்களில்
ஏற்றிவத்த கனவுகள்
கலையாமல்
காக்கின்ற தலைவனின்
கரங்களின்
வலிமை கூடட்டும்...!
கருப்பு தாள்கள்
இங்கு குறையுமோ
இல்லையோ
எற்றத் தாழ்வுகள்
குறைகின்ற பாதையின்
முதல் அடி - இன்று
வலியானாலும்
வசந்தம் வரும்...!