Wednesday, 13 April 2016

மருத்துவம்

இருகண்ணும்
       தொலைந்து போகும்
மை இருட்டு
      இடைவிடாது
கொட்டிச் சென்ற
       கோடை மழை...!

தீண்டிய நாகத்தின்
      திசையறியா
திகைப்பு - அங்கே
     வேய்ந்துவிட்ட கூரை
ஈரக்கற்றில்
     உருவாக்கிய சலசலப்பு...!

யாருமற்ற சாலைகள்
      எமனது வருகையென
ஓலமிட்ட
      மக்கள் கூட்டம்...!

தோகையின்றியும்
      வாசல் வந்த
தேவதை  - துடைத்துச்
       சென்ற கண்ணீர்
துளிகள்...!