வரம் கிடைக்கு முன்னே
விரதமெனும் வதைபாடு
இருள் விலகும் முன்னே
வளம்வரும் சலசலப்பு
நன்மையின் தொடக்கத்தின்
தீய்மையின் துடிதுடிப்பு...!
வலி உள்ளவர்களின்
கூச்சல் குரல்
தினம் தினம் - இங்கு
ஓங்கி ஒலிக்க...!
வதைபடும் கூட்டத்தின்
கண்களில்
ஏற்றிவத்த கனவுகள்
கலையாமல்
காக்கின்ற தலைவனின்
கரங்களின்
வலிமை கூடட்டும்...!
கருப்பு தாள்கள்
இங்கு குறையுமோ
இல்லையோ
எற்றத் தாழ்வுகள்
குறைகின்ற பாதையின்
முதல் அடி - இன்று
வலியானாலும்
வசந்தம் வரும்...!
Friday, 25 November 2016
Wednesday, 13 April 2016
மருத்துவம்
இருகண்ணும்
தொலைந்து போகும்
மை இருட்டு
இடைவிடாது
கொட்டிச் சென்ற
கோடை மழை...!
தீண்டிய நாகத்தின்
திசையறியா
திகைப்பு - அங்கே
வேய்ந்துவிட்ட கூரை
ஈரக்கற்றில்
உருவாக்கிய சலசலப்பு...!
யாருமற்ற சாலைகள்
எமனது வருகையென
ஓலமிட்ட
மக்கள் கூட்டம்...!
தோகையின்றியும்
வாசல் வந்த
தேவதை - துடைத்துச்
சென்ற கண்ணீர்
துளிகள்...!
தொலைந்து போகும்
மை இருட்டு
இடைவிடாது
கொட்டிச் சென்ற
கோடை மழை...!
தீண்டிய நாகத்தின்
திசையறியா
திகைப்பு - அங்கே
வேய்ந்துவிட்ட கூரை
ஈரக்கற்றில்
உருவாக்கிய சலசலப்பு...!
யாருமற்ற சாலைகள்
எமனது வருகையென
ஓலமிட்ட
மக்கள் கூட்டம்...!
தோகையின்றியும்
வாசல் வந்த
தேவதை - துடைத்துச்
சென்ற கண்ணீர்
துளிகள்...!
Subscribe to:
Comments (Atom)