Tuesday, 6 October 2015

மருந்து

விடியும் முன்னே
      ஏற்றிவைத்த தீபங்களாய்
அந் நட்சத்திரக்
     கூட்டம்...!

காலைக் கதிரவனின்
     கதகதப்பில்
மறைந்து போகும்
     பனித் துளிகள்...!

மேகம் கறுக்கு
    முன்னே
தோகை விரித்த
     மயில்...!

துலாபாரத்தில்
    வீற்றிருந்தும்
விடாமல் புன்னகைத்த
    சிறுமி...!

தோற்றம் தாண்டி   
     தோள் கொடுக்கும்
தோழனும் - அங்கே
     உயிர் காக்க
ஏழை கொடுத்துவிட்ட
    ஒரு குவளை
தண்ணீரும்...!