விடியும் முன்னே
ஏற்றிவைத்த தீபங்களாய்
அந் நட்சத்திரக்
கூட்டம்...!
காலைக் கதிரவனின்
கதகதப்பில்
மறைந்து போகும்
பனித் துளிகள்...!
மேகம் கறுக்கு
முன்னே
தோகை விரித்த
மயில்...!
துலாபாரத்தில்
வீற்றிருந்தும்
விடாமல் புன்னகைத்த
சிறுமி...!
தோற்றம் தாண்டி
தோள் கொடுக்கும்
தோழனும் - அங்கே
உயிர் காக்க
ஏழை கொடுத்துவிட்ட
ஒரு குவளை
தண்ணீரும்...!