மின்னும்
வானிலை
மிதக்கும்
மேகங்கள்...!
நிசப்த
நிலம்
நீர் வழி
வந்ததில்
காற்று
சுமந்து வந்த
ஈரப்பதம்...!
பசுமை
ஆடை உடுத்திய
வயல்
வெளிகள்
கூடு தேடி
பறந்து சென்ற
வெண் புறாக்கள்...!
வெட்கத்தில்
பாதி முகம்
காட்டும்
பிறை நிலவு
மையிருட்டில்
விளக்கேற்றுவதாய்
மேற்கே
முளைத்திருந்த வெள்ளி்...!
இருள்
கவர்ந்தும்
விடியல்
வருமென
இயல்பாய்
நெஞ்சுக்குள்
நிலைத்திருந்த
நம்பிக்கை...!