Tuesday, 25 August 2015

சாலை வழி

வானவில்லின்
      வண்ணங்களை
வெட்டியெடுத்து
      வரைந்து விட்ட
ஓவியமாய் அச்
     சாலை வழி...!

பாதை எங்கிலும்
      வாழ்வின் வழிகாட்டும்
வள்ளுவன் வாக்கினை
      சுமந்து நிற்கும்
மரங்கள்...!

பரந்து விரிந்த
      மரக்கிளையில்
அங்கும் இங்குமாய்
      பறந்து திரிந்த
கிளிக் கூட்டமும்...!

சட்டென விழும்
      சூரியக் கதிரும்
முரிந்து போவதாய்- அக்
       குளத்து நீரின்
சல சலப்பு...!

ஓரமாய் ஓங்கி
    எழுந்த பின்னும்
கர்வம்
    எனக்கில்லை என
தலை குனிந்த
     மூங்கிலடி...!

நீங்காமல்  ஒலித்திருந்த
      இரண்டெழுத்து  மந்திரமும்
வலியவர்
      வயிறு நிறைய
இட்டு வைத்த
     வாழை இலையும்...!