மழலை தொடங்கி
மடியும் வரை
மனிதம் மறக்காமல்
சேர்த்து வைக்கும்
ஒற்றை எதிர்மறை...!
நிழல்களில்
தெரிவதில்லை ஆனாலும்
நிஜத்தினில்
நெருடுகின்ற
நினைவுகளின்
முதற் புள்ளி...!
இது
தொலைந்து போகையில்
தொடர்வதும்
தொடர்கையில்
தொலைவதுமாய் - நம்
மன நிம்மதி...!