Thursday, 16 April 2015

கர்வம்

மழலை தொடங்கி
     மடியும் வரை
மனிதம் மறக்காமல்
     சேர்த்து வைக்கும்
ஒற்றை எதிர்மறை...!

நிழல்களில்
    தெரிவதில்லை ஆனாலும்
நிஜத்தினில்
    நெருடுகின்ற
நினைவுகளின்
    முதற் புள்ளி...!

இது
     தொலைந்து போகையில்
தொடர்வதும்
     தொடர்கையில்
தொலைவதுமாய் - நம்
    மன நிம்மதி...!