Friday, 23 January 2015

இருள் ஒளி

மின்னலின் கீற்றினில்
      முகம் பார்க்கும்
மை இருட்டு - அங்கே
      மரம் சூடிக் கொண்ட
வீண் மீன்களாய்
      மின்மினிக் கூட்டம்...!

அச்சுருத்தும் ஆந்தையின்
       அலறல்கள்
இயற்கையின் படைப்பினில்
       அரக்க உருவம்
கொண்டுவரும்
       மாயத் தோற்றம்...!

ஆளுயர அய்யனாரது
       வாள் முனை- அங்கு
எற்றி வைத்த
       தீப ஒளியில் - எங்கள்
மன இருள்
       விலகுவதாய்
விழுந்திருந்த
        நம்பிக்கையின்
விழுதுகள்...!