மின்னலின் கீற்றினில்
முகம் பார்க்கும்
மை இருட்டு - அங்கே
மரம் சூடிக் கொண்ட
வீண் மீன்களாய்
மின்மினிக் கூட்டம்...!
அச்சுருத்தும் ஆந்தையின்
அலறல்கள்
இயற்கையின் படைப்பினில்
அரக்க உருவம்
கொண்டுவரும்
மாயத் தோற்றம்...!
ஆளுயர அய்யனாரது
வாள் முனை- அங்கு
எற்றி வைத்த
தீப ஒளியில் - எங்கள்
மன இருள்
விலகுவதாய்
விழுந்திருந்த
நம்பிக்கையின்
விழுதுகள்...!