Saturday, 15 November 2014

புதுத் தளிர்

வானவில்
      விட்டு சென்ற
வண்ணங்களின்
      சிதறல்களில்
உருகொண்டிருந்த
     தாய் முகம்...!
 
நெடுந்தூரப்
     பாதையில்
இரும்புப் பறவை
      விட்டு சென்ற
வழித்தடம்...!

வானத்தின்
      எல்லை வரை
பறந்துவிட
      வட்டமிட்டு
பறந்திருந்த
     வெண் பருந்து...!

வீசிய காற்றில்
        திசையறியாது
திகைக்கின்ற
       சிறுவனின்
காகிதப்
        பறைவை...!

வலிமை
      குறைந்தாலும்
உயிர் வாழ
      ஒளியூட்டிக்
கொண்டிருந்த
     பகலவன்...!

கருமேகங்கள்
      கலைந்தாலும்
இரக்கத்தில்
      பொழிந்துவிட்ட
மழைத்துளியில்
      புத்துணர்வு
கொண்டிருந்த
      புதுத் தளிர்...!