Friday, 24 May 2013

நிலம்

நிலையற்ற மனிதத்தின்
         நிழல் விழுவதும்
நிஜம் மறைவதும்
         நிலையான - இந்
நிலமகளின்
         மடியினிலே...!

வெட்டினோம்
         புதையல் அளித்தாள்
துலையிட்டோம் - உயிர்
        தாகம் தனித்தாள்
விதவையாக்கினோம்
        மறு வாழ்வு கொடுத்தாள்...!

இன்று - அவள்
      கற்பம் கலைக்கிறோம்
நம்மை
      கல்லறைக்குள் புதைக்கிறாள்...!

Thursday, 16 May 2013

உதவும் கரங்கள்

நாளை என்பது
         பயமானால்
இன்றே நம்மை
        கொன்றுவிடும்
நேற்று என்பது
        வலியானால்
வாழ்வு
        தடம் புரண்டுவிடும்...!

கனவுகள் இங்கே
        விதையாகட்டும்
கண்ணீரினை
        துடைக்கின்ற விரல்கள்
நம் விடியளாகட்டும்...!

முடியும் என்ற
       சொல்லில் முன்னோக்கவும்
வறுமை என்ற
       சொல் வறண்டு போகவும்
இணையட்டும் இந்த
       உதவும் கரங்கள்...!