நிலையற்ற மனிதத்தின்
நிழல் விழுவதும்
நிஜம் மறைவதும்
நிலையான - இந்
நிலமகளின்
மடியினிலே...!
வெட்டினோம்
புதையல் அளித்தாள்
துலையிட்டோம் - உயிர்
தாகம் தனித்தாள்
விதவையாக்கினோம்
மறு வாழ்வு கொடுத்தாள்...!
இன்று - அவள்
கற்பம் கலைக்கிறோம்
நம்மை
கல்லறைக்குள் புதைக்கிறாள்...!
Friday, 24 May 2013
Thursday, 16 May 2013
உதவும் கரங்கள்
நாளை என்பது
பயமானால்
இன்றே நம்மை
கொன்றுவிடும்
நேற்று என்பது
வலியானால்
வாழ்வு
தடம் புரண்டுவிடும்...!
கனவுகள் இங்கே
விதையாகட்டும்
கண்ணீரினை
துடைக்கின்ற விரல்கள்
நம் விடியளாகட்டும்...!
முடியும் என்ற
சொல்லில் முன்னோக்கவும்
வறுமை என்ற
சொல் வறண்டு போகவும்
இணையட்டும் இந்த
உதவும் கரங்கள்...!
பயமானால்
இன்றே நம்மை
கொன்றுவிடும்
நேற்று என்பது
வலியானால்
வாழ்வு
தடம் புரண்டுவிடும்...!
கனவுகள் இங்கே
விதையாகட்டும்
கண்ணீரினை
துடைக்கின்ற விரல்கள்
நம் விடியளாகட்டும்...!
முடியும் என்ற
சொல்லில் முன்னோக்கவும்
வறுமை என்ற
சொல் வறண்டு போகவும்
இணையட்டும் இந்த
உதவும் கரங்கள்...!
Subscribe to:
Comments (Atom)
