Monday, 14 October 2013

இருப்பவை

வண்ணங்களின் இருப்பதில்லை
       இவ்-வாழ்வு - அது
வளமான மனதினில்
       வளர்ந்து நிற்பது...!

நிரப்பி விட்ட
      பொருட்களில் இருப்பதில்லை
இச்-சந்தோசம் - அது
      நிரைவான மனதினில்
புகுந்து கொண்டது...!

போட்டியிட்ட
      பாதையில் இருப்பதில்லை
இந்-நிம்மதி - அது
      போற்றுகின்ற உறவினில்
உறைந்திருப்பது...!

அடுக்கிவைத்த
      எதிர்பார்ப்பினில் இருப்பதில்லை
இவ்-அன்பு - அது
      ஆதரிக்கின்ற
அணுக்களின்
       ஆரம்பப்புள்ளி...!

Saturday, 12 October 2013

வறையரையில்லா

மூன்று நாள்
     பெய்திருந்த மழையில்
முல்லை நிலத்தின்
     வனப்பு...!

மழை வெயில்
      சேர்கின்ற வேளையில்
உடல் சிலிர்க்கும்
      வெண் புறாக்கள்...!

உள்ளிருந்து உதித்து
      வெண்மேகத் தோணியில்
வலம் வருகின்ற
      வெண்ணிலவு...!

மூவாயிரம் ஆண்டுகள்
      உயிர் வாழுகின்ற - என்
தாய் மொழியான
      தமிழ்...!

என்றுமே நீங்கள்
      அழகுதான் - எங்கள்
இளமையென்னும்
      வரையறையில்லாமல்...!

Saturday, 28 September 2013

பருவ காலம்

மீதமான மின்னொளியில்
       புதுமையின் துளிர்தளும்
புன்னகைக்கும் பூக்களை
        சுமந்திருந்த
எல்லோரா ஓவியமாய் - இவ்
       இளவேனிற் காலம்...!

மெருகேறியவன் மேனியின்
       தக தககப்பில்
கொடுத்தவன் பரிக்க
      வறண்டு போய்
தாகம் ஏற்றுக்கொள்ளும்
       தவிப்பாய் - இக்
கோடை காலம்...!

கார் மேகத்தின்
      கருணை - அதில்
விழுகின்ற கண்ணீரில்
      கானகமும்
செழிக்கின்ற
      கார் காலம்...!

பிரிவினை என்றாலும்
      உலகத்தின் நியதியால்
சருகுகள் பிரிகின்ற
      சத்தியத்தின்
சோதனையாய் - இவ்
      இலையுதிர் காலம்...!

அருகிலிருக்கும்
     அருகம் புல்லும்
முகம் மூடி
       ஜொலிக்கின்ற
முன் பனிக் காலம்...!

முற்றத்தில்
        வீற்றிருக்கும்
 துளசியின்
         தளிர்ச்சிக்கு
மென் பனி துவிய
         பின் பனிக் காலம்...!

Thursday, 26 September 2013

பிஞ்சுத் தடங்கள்

 பிழைகள் நிறைந்திருந்த
         பிள்ளை காலம்
கனிவானது - இந்த
         உயர்ந்துவிட்ட
கள்ளத் தனத்திற்கு...!

நெருங்கி நின்ற
       நெருப்பு கூட
இருந்ததில்லை
        பயமென - இப்
பதுங்கி வாழவேண்டிய
    பாசறைக்கு...!   

சந்தோசம் மட்டும்
    ஏந்தி நின்ற  
நடுக்கமில்லா நட்பில்
    ஊர் உறங்கும்
வேளையிலும்
    உழைப்பினில்
 உருவான மரக்கூடு
    கான சென்ற ஞபாகம்...!

ஒவ்வொரு நாளும்
      உணர்வுகளில் தோன்றி
மறியும் தேடலாய் - இப்
       பிஞ்சுத் தடங்களின்
பதிவு -  என்    
        பாதை வழி
  சிதறிய   முத்துக்களாய்...!

Friday, 13 September 2013

பட்டறிவு

வாழ்வு வாழக்
      கற்றுக் கொடுக்கிறது
வலுவற்ற பகுதியினை
      வலுவாக்க...!

ஏற்ற இறக்கங்களில்
       இதய நரம்பின்
துடிப்பினில் தூண்டப்பட்ட
       உற்ச்சாகமும்
உதவுகின்ற  
    சீிரமைப்பும்...!

மீண்டும் மீண்டும்
       இது மீள்வினையே
மீளுகின்ற தன்மை
        நம்மில்
நிலைக்கும் வரை...!