Friday, 23 August 2013

சுத்திகரிக்க முடியா ?

ஐந்து நான்கு
        ஆண்டுகளின்
ஆளுமையில்
       அன்னையின் ஆதாரமும்
அடுக்கடுக்காய்
       குறைந்திருக்கிறது...!

வாரிசுகளை வாழ
      வைக்கும் போராட்டம்
வறுமைக் கோடுகள்
      வளர்ந்திருப்பினும்...!

தண்டனை அளிக்கா
       தவறுகள் தரித்திரமாகி
அடைந்துவிட்ட
       சுதந்திரத்தை
சுத்திகரிக்க முடியா - இவ்
      வெண்ணிற ஆடைகள்
நம் விடியளுக்கு
     வந்துவிட்ட  வறுமை...!

http://www.newslaundry.com/2013/08/hawala-logic/

Monday, 5 August 2013

பாதை

சுய சரித்திரத்தில்
      ஏற்றுக் கொண்ட
துறுப்புச் சீட்டுகளை
       துடுப்பாக்கி
சந்தோச சுவடுகளை
       நோக்கிய பயணம்...!

தொடக்க-முடிவு
       தெரியாவிட்டாலும்
தெளிந்திருந்த
       சுய ஒளியில்
பயணிக்கிறோம்
       பிறப்பிடத்தின்
புகழ்  போற்ற...!

பிறந்த குழந்தையின்
      பிறை நெற்றி
உடைந்தாலும்
       உடைந்து போக
நம்பிக்கையில்
       நடந்து வந்த
பிஞ்சுத் தடங்கலாய்
      மனிதத்தின்
வாழ்க்கைப் பாதை...!

Wednesday, 31 July 2013

ஆனந்தம்

அனைகட்டிய ஆயிரங்கள் 
        எதிர்த்தாலும்
அரவணைக்கின்ற
       ஆருயிர்களின் அன்பினில்
அகப்படுகின்ற
       அசைவு...!

தாறுமாறாய் ஓடுகின்ற
        பாதையிலும்
தத்தை மொழி கேட்டு
       துள்ளுக்கின்ற
தசை நார்களின்
       தன்னிச்சை இயக்கம்...! 

கோள் இங்கு
       கோளமாக படைக்கப் பட்டது
கோடிட்ட கொடுமைகள்
       இல்லாது இருப்பதற்கோ
தடையில்லா
      இசை வெள்ளமாய்
தவழுகின்ற - இப்
      பிள்ளைக்  குணத்திற்க்கு...!

Wednesday, 24 July 2013

விடியல்

இருள் விளகுகின்ற நேரம்
          அருகில் இருக்க
இமை விழிக்கின்ற தூரத்தில்
         விடை தெரியா சுழல்
விடை கேட்க வந்த
         விடியல் வரும் நேரம்…!

பார்வையிருந்தும் பயனில்லாது
         பயணம் இருக்க
நீடித்த வெளிச்சம்
         ஏற்ற வந்த - இவ்
விடியல் வரும் நேரம்…!

விடை கேட்க வந்த
         இருள் ஒலிகள் சந்தமாக
உறைப்பதற்க்கு ஒன்றுமில்லை
         உறங்கிய ஊர்
விழித்துத்துக் கொள்ளும் - இவ்
         விடியல் வரும் நேரம்…!

Monday, 22 July 2013

அனுபவம்

நேற்றுவரை
       நடந்ததென்ன
நாடகமோ!
      இன்று மட்டும்
நிஜமாக...!

காற்றினிலே
       கரைந்து வந்த
காவியங்கள்
       கற்பனையோ!
மனம் போகிற
       போக்கினை
தேர்வு செய்ய...!

நடந்தவை
      நடந்தவையே
பதிந்தவை
     பதிந்தவையே
பாதை மாறாத
      திடமிருக்கையில்...!

ஆரூடம் சொன்ன
       பிள்ளை மொழி
பொய்த்ததுண்டு
      அனுபவம்
பொய்த்ததில்லை...!